Wednesday, August 12, 2020

பணத்தில் நீ

எப்போதும் போல் ஊருக்கு திரும்ப தயாராகிக்கொண்டிருந்தேன், வெள்ளிக்கிழமை இரவு என்பதால் பேருந்தில் நிற்க்க கூட இடம் இருக்காதென்பது தெரியும்.

ஆனால் அன்று அதிசயமோ இல்ல எங்க ஊருக்கு போக நிறைய பேர் இல்லயோ என்ற ஆச்சர்யத்தோடு பேருந்தில் ஏரியாச்சு, பிடிக்காத கடைசி வரிசையில் நடு சீட்டு :( தூங்க வசதி இல்லாததினால் ஹெட்போனில் பாட்டுடன் சிறிது நேரம் கழிய, பாட்டு முடிந்து அடுத்த பாட்டு வரும் இடை அமைதியில் சில பெண்களின் சிரிப்பு சத்தம் அடுத்த பாட்டை மாற்ற விடாமல் அந்த பெண்களின் பேச்சுகளை(சிரிப்பை) கேட்க்க தொடங்கினேன்.

பேருந்தின் உள் நிற்க யாரும் இல்லாததால் அவளும் அவள் தோழியும் திரும்பி உட்கார்ந்து பேச தொடங்கினர்(பேருந்தின் வலது சீட்டில் அவளும் இடது சீட்டில் அவள் தோழியும்).  அவள் முகம் அழகாய் தெரிய வேண்டும் என்பதற்காகவே, அவளுக்கு மேல் ஒரு வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற ட்யூப்லைட், அவள் தேவதையானால் நான் சொர்கம் சென்றேன்.

இப்படியே அவள் தோழியுடன் பேசுவதையும் சிரிப்பதையும் பல க்யூட் முகபாவங்களையும் பார்த்துக் கொண்டுவந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இன்னும் 1/2மணி நேரத்தில் ஊர். அவள் எங்கு வழியில் உள்ள ஊர்களிலேயே இறந்கிவிடுவாளோ என்ற யோசனையோடும் ரசிப்பதையும் நிருத்தாமல் ஊர் வந்துவிட்டது. சரி இறங்குவதற்க்கும் முன் அவளின் முகத்தை இன்னும் அருகில் பார்த்துவிட வேண்டும் என்று அவளை தாண்டி சென்று முன் படி வழியில் இறங்கலாம் என ப்ளானுடன், பஸ் ஸ்டாப் வந்துவிட்டது நான் எழுந்து அவளை நோக்கி சென்று அருகில் நன்று பார்த்ததும், அவளும் என்னை பார்த்தாள். இது போதும் என்று இறங்கி வந்துவிட்டேன் .

No comments:

Post a Comment