எப்பவுமே என் 2 வீலர்ல போகும்போதெல்லாம் எதையாவது யோசிச்சுட்டே தான் போறது பழக்கம்.
பழக்கம் என்பதை விட என் மூளைல ஆழமா பதிவான விஷயங்களில் இதுவும் ஒன்னு. அப்படி தான் இன்றும் போயிட்டுயிருந்தேன், சனிக்கிழமை இரவு என்பதால் ஞாயறின் மகிழ்ச்சிகளையும், ப்ளான்களையும் யோசிச்டே 30-40 KMPH வேகத்தில போயிட்டிருந்தேன்.
ஷாப்பிங், சினிமா, ஃபிகர்ஸ், லஞ்ச் இப்படியே நாளைய ஞாயிற கொண்டாட ப்ளான்களை பற்றி ஓடிட்டுயிருந்தது .
இது எல்லாம் என் வீட்டுக்கு செல்லும் அந்த 10நிமிஷ பயணத்தில் 7நிமிடங்களில் நடந்தது .
இந்த கற்பனையை ஏதோ ஒரு விஷயம் டிஸ்ட்டர்ப் பண்ணீட்டேயிருந்தது. அது என்னனு கூட என் வலது மூளை பொருட்படுத்த விரும்பலை, இருந்தும் என் இடது பக்க மூளை என்னை கண்ட்ரோல் பண்ண தொடங்கியது, என் வண்டியின் வேகம் குறைந்து ரோட்டின் ஓரம் செல்லத்தொடங்கியது . என் வலது மூளையின் தாக்கம் குறைந்து என் காதுகளில் விழுந்தது அந்த அவசர அபாய ஒளி ஆம்புலன்ஸின் சைரன் சத்தம் ....
இது என் கற்பனைகளை சிதறடித்த மீதி 3நிமிடங்களில் நடந்தது .
No comments:
Post a Comment